பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

н wwwww Javon sthon uvлуп I ஆம் திருமுறை 5. முருகன் பெருமை திருந்தப் புவனங்க ளின்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங் குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. (பொ - உ) திருந்திய வகையில் - நன்றாக உலகங்களைப் பெற்றருளிய (பொற்ப்ாவை) அழகிய பாவை போன்ற தேவி பார்ப்பதியின் திருமுலைப்பாலை (அருந்தி) உண்டு, சரவணம் என்னும் மடுவிலே (பூந்தொட்டிலிலே தாமரை மலர்களாய படுக்கையிலே வீற்றிருந்து (அறுவர்) கார்த்திகை மாதர் ஆறுபேர்களின் (கொங்கை) முலைப்பாலை விரும்பி - இந்தக் குழந்தை நம்மை வாட்டப் பிறந்திருக்கின்றதே என்று உணர்ந்து கடல் அழ கடல் அழவும், கிரெளஞ்சம் re- எழுகிரி என்னும் மலைகள் அழவும், சூரன் அழவும் விம்மி அழுகின்ற (குருந்தை) இளங் குழந்தை (முருக்ன்ை) (குவலயம் குறிஞ்சிக் கிழவன் என்று ஒதும்) உலகிற் பெரியோர் மலை கிழவோன் எனச் சொல்வார். (சு.உ) (இவனால் நமக்கு ஊறு பின்னர் வரப்போகிறதென்று உணர்ந்து) கடலும், மலையும், சூரனும் அழும்படி அழுத | குழந்தையைப் பெரியோர் மலைகிழவன் என்று கூறுவது ஆச்சரியம் (கு.உ) கடல் = கன்மம்; குன்று = மாயை. சூர் = ஆணவம் குருந்து = பிள்ளை, குழந்தை குவலயம் = உலகம்; "உலகம் என்ப துயர்ந்தோர் மாட்டே" யாதலின், பெரியராம் நக்கீரர் "பழமுதிர்சோலை மலைகிழவோனே" என ஒதினதை ஈண்டு அருணகிரியார் குறிப்பிற் கூறினர்போலும்: தேவி புவனங்களை ஈன்றது - உலகின்ற பச்சை உமை, சகல புவனமும் உதவிய பதிவ்ரதை' திருப்புகழ் 816, 511, கடல் - குன்று - சூர் இம் மூன் றும் வேலால் வேதனை உற்றன - வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே" (62):வேல்பட் பழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் (40) பெரும்பைம் புணத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பி னான்மெல்ல மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந் தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.