160 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 14. அலரறிவுறுத்தல் செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற் செந்தி லகத்தலர் துாற்றிடுங் கேடு திவாகருளே. (ப உ) செம் - சிவந்த திலகத் து பொட்டினால், அலர் - பரந்த வாள் - ஒளி பொருந்திய நுதல் - நெற்றியையுடைய, வேடிச்சி - வள்ளிநாயகியினது, முகம் வதனம், பங்கசெம் - தாமரையாகும், திலகத்து-எள்ளினது, அலர் - பூ துண்டம் - மூக்காகும், என்னா நின்றஎன்று நலம்புனைந்துரைக்கும், சேய் - குமாரக்கடவுளே! சங்க - கூட்டமாகிய, செந்து ஜீவராசி கட்கு இலக இருப்பிடமான, தலராசி தந்தானை - அண்டங்களைப்படைத்த பிரமனை, சிறையிட்ட வேல் . சிறைப்படுத்திய வேலாயுதத்தை யுடைய, செந்தில் - செந்திற்பதியோனே அகத்து அகங்காரத்தினால், அலர் - துாற்றிடும் . அலர் துாற்றுகின்ற கேள்-சுற்றத்தாரும், துதி - (யாவரும்) துதிக்கத்தக்க வாகு உனது புயத்தை அருள் - கிருபை செய்யவேண்டும். (எ-று) நீ . தோன்றா எழுவாய்.அருள் பயனிலை ஏ-அசை (க-உ)வள்ளிநாயகியினது முகத்தைத் தாமரையென்றும், மூக்கை எட்யூவென்றும் வியக்குங் குமாரக் கடவுளே! பிரமனைச் சிறையிட்ட செந்தினாயகனே! சுற்றத்தார் மிகவும் அலர் துாற்றுகின்றார்கள்; (அது நீங்க) உனது திருப்புயந்தந்தருளவேண்டும். (கு உ) அலரறிவுறுத்தல் என்னுந்துறை திருக்கோவை யாரில் அலராயிரம் எனத் துவக்கும் 180ஆம் பாடலைப் பார்க்க 1. முகம் கமலம் ஒக்கும் - திருமுகங்கமலம்'. தணிகைப்புராணம் - களவு - 43; மூக்கு - எட்பூவுக்கு உவமை - "எட்பூ ஏசிய நாசியாய் இயம்புக" மனோன்மணியம் 12:28, ஒதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கொக்கும்" - கம்பராமாயணம் - நாடவிட்ட - 52, நலம்புனைந்துரைத்தல் - 'பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந் தங்கதிர்வேலோன் அயர்வு நீங்கியது" -திருக்கோவ்ை-11 2. வேல் பிரமனைச் சிறையிட்டது . திருப்புகழ் 571 பக்கம் 310, பாடல் 757-பக்கம்-256 கீழ்க்குறிப்பு. 3. சுற்றத்தார் அலர் துாற்றுதல் செய்யுள் 9 பார்க்க
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/167
Appearance