கந்தரந்தாதி 165 19. பிரமனது அறியாமையை இகழ்ந்தது சீயணம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல் சியனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன் சியனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார் சயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. (ப_ உ) சீயன்பார்வதிபாகரான சிவன், நம் - நம்மை, போதி உபதேசி, என என்று, வாய் புதைத்துவாய் மூடி, செவிதரகேட்கவும், தோல் யானையும், சீய சிங்கமும், நம்பு - தஞ்சமா யுறைகின்றதும், ஒதிய கல்விக்குறை விடமுமான, மலையிற்றாதை பொதியமலைக்கு - முதல்வரான, சிறுமுருவன் - அகத்திய முனிக்கு சீயன்பாட்டனாகிய, அம்போதி கடைந்தான் - பாற்கடலைக் கடைந்த விஷ்ணுவினது, மருகன்-மருமகனான குமாரக்கடவுள், செப்ப-உபதேசிக்க திகைத்தார். (பிரணவப் பொருள் தெரியாமல்) தியக்க முற்றிருந்தார், சீ . இகழத்தக்க அனம்போதில் - அன்ன வாகனத்தின்மேற் செல்லும், அரன் - பிரமன், ஆதி முதன்மையாகிய, ருக்குவேதத்தை என் - என்ன, செய-செய்யும்படி, கற்றது-கற்றுக்கொண்டது.(எறு) அரன் எழுவாய். கற்றது. பயனிலை ஏ-அசை (க உ) பார்வதிபாகரான பரமசிவன் வாய்மூடிக் கேட்கவும், திருமான் மருகனான குமாரக் கடவுள் பிரணவப் பொருளை சொல்ல்த் திகைத்து நின்ற பிரமா ஆதிவேதத்தை ஏன் கற்றான்? (கு உ) (1) சிவபிரான் பக்தியுடன் உபதேசம்கேட்டனர் என்பது "அரன்.........பணிசெயஅருளிய"மிகுத்த பக்திகூர் சுரக்க"- திருப்புகழ் 755, 1206 என வருமிடங்களிற் காண்க (2) அகத்தியர் பிரமதேவனுக்குப் பிறந்தவர் என்று காவிரிப்புராணம் கூறும்; ஆதலால் திருமால் அகத்தியருக்குப் பாட்டன். (3) அனம்போதில் என்பதற்கு அன்னவாகனத்திலும், போதில் (தாமரை) மலரிலும் வீற்றிருப்பவன் எனவும் பொருள் காணலாம். அரன் எப்பொருட்கும் இறை (சூடா) இருக்கு - வேத மந்திரங்கள் வேதப் புனித இருக்கை நாவில் கொண்டு" - திருவாய்மொழி 5-29 சரணமென வ தவர்க் காதார மான இரு சரணமும் கூப்பி, வேழச் - சருமமும் உடுத்தி, வெம்புலியதன் உடுத்தி, முன் த னையும் ஒடுக்கி, நாகா
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/172
Appearance