பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் تهருத்தம் காப்பு 'சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் 'சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவனியுங் 'கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் 'கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய் கேந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிய மோகரத "கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத் "தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச் சிேவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே, 1. சந்தனம், (பாளிதம்) பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகள் பூசியதாய், (புளகித) பெரு மகிழ்ச்சியை ஊட்டுவதாய், (சண்பக) சண்பகமாலை அணிந்ததாய்க், (கடகம்) கங்கணம் - வீரவளை அணிந்ததாயுள்ள புயம் திருப்புயத்தை உடையவனும் 2. (சமர) போர் செய்பவனும், (சிகாவல) மயில் வாகனத்தை உடையவனும் ஆன (குமர) குமாரக்கடவுளே! (ஷடாநந) ஆறு திருமுகங்களை உடையவனே சரவணத்தில் தோன்றியவனே, குராமலர் அணியும். 3. (கொந்தளபார) கூந்தற்பாரத்தை உடைய (கிராத) வேடர் குலத்தவளான (புராதனி) பழையவளாம் வள்ளியின் (கொண்க) நாயகனே! என்று (பரவும்) போற்றப்படும்