பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 795 வேலு மயிலுந் துணை பதினோராந்திருமுறை சைவத் திருமுறைகளுட் பதினோராந் திருமுறைபோல முருகவேளின் சிறந்த அடியார்கள் அருளிய பாடல்கள் இப் பதினோராம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள. விரிவஞ்சி, சிலவற்றின் பகுதிகளே ஆளப்பட்டும், பல விடப்பட்டும், பத்தொன் பதாம் நூற்றாண்டுக்கு முன் இருந்த பெரியோர்களின் பாடல்க ளொடு நிறுத்தப்பட்டும் ஒருவாறு தொகுக்கப்பட்டதாகும் இப் பதினோராம் திருமுறை பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், பின்னரும் வாழ்ந்த பெரியோர்களின் பாடல்கள் உரிய காலத்தில் 11ஆம் திருமுறையின் இரண்டாம் பகுதியாக இணைக் கலாம். குறைகள் பலவற்றையும் எம்பெருமானும், எம்பெருமானுடைய அடியார்களும் பொறுத்தருள வேண்டும். - О -- கந்தரந்தாதி 51 ஆம் பாடலிலும், திருப்புகழ் 9, 23 19, 1278 எண்களுள்ள பாடல்களிலும் அருணகிரிநாத ஸ்வாமிகளாற் பாராட்டப்பட்டுள்ள நக்கீர தேவர் திருவாய்மலர்ந்தருளிய 1. திருமுருகாற்றுப்படை - O -- 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு