பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/883

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

876 முருகவேள் திருமுறை * 111 திருமுறை ஆத்தே ஆத்தே எனுங்குமரா அடியேஞ் - சிற்றில் அழியேலே அரசே ஞ்சைப் பதிவ்ாழ்வே அடியேஞ் சிற்றில் அழியேலே. (161) பொய்யா உளத்தில் இருப்பாரைப் பொலியுங் கயிலைப் பொருப்பாரைப் பொருமா கரியை உரிப்பாரைப் புரமூன் றெரிய எரிப்பாரைக் கையார் மறிமான் மழுவாரைக் கமலா லயன்மால் தொழுவாரைக் கனக சபையில் நடிப்பாரைக் கங்கை முடியின் முடிப்பாரை மையார் மலத்தை ஒழிப்பாரை மதவேள் எளிய விழிப்பாரை மறலி நடுங்கப் பொருவாரை வழிக்குத் துணையா வருவாரை ஐயா ஐயா எனுங்குமரா அடியேஞ் சிற்றில் - அழியேலே அரசே வி ஞ்சைப் பதிவாழ்வே அடியேஞ் சிற்றில் அழியேலே. (162) இம்மா நிலத்தை அளந்தானை இகல்மா மருதம் பிளந்தானை இலங்கா புரியைக் கெடுத்தானை இமையோர்க் கமுதம் கொடுத்தானைக் கைம்மா இடுக்கண் களைந்தானைக் ககனம் அளவா வளர்ந்தானைக் கன்றால் விளவை எறிந்தானைக் கருதார் உளத்திற் பிரிந்தானை மைம்மா சுணத்தில் நடித்தானை வருபா ரதத்தை முடித்தானை வையம் அனைத்தும் அயின்றாணை வடத்தின் இலையில் துயின்றாணை அம்மான் அம்மான் எனுங்குமரா அடியேஞ் சிற்றில் - அழியேலே அரசே விரிஞ்சைப் பதி வாழ்வே! அடியேஞ் சிற்றில் அழியேலே. (163) (மார்க்சகாய தேவர்)