பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: அப்படி யென்றால் உன் உள்ளத்தில் நான் ஒரு நொடிப் பொருள்! அப்படித் தானே? வீணா: அப்படியில்லை! என் உள்ளத்தில் நீங்கள் - நொடிக்கு நொடி தோன்றும் பொருள் நம்பி: உன் இதயக் கோயிலில் நான் - மூலஸ்தான மூர்த்தியாக நிலைத்திருக்க விரும்புகிறேன்... ஆனால் நீ என்னை உற்சவ மூர்த்தியாகமட்டும் அனுமதிக்கிறாய் வீணா: ஈழம் எனது நாணயத்தின் தலை: நீங்கள் பூ காலம் கனியும் வரை பொறுத்திருப்போம். (பிரிந்து செல்கின்றனர்) கவிஞர் முருகுசுந்தரம் 118