பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டெறும்பும் நம்மைத் திரும்பிக் கடிப்பதில்லையா? (மருத்துவர் உள்ளே வருகிறார்) மேகலை: வணக்கம் டாக்டர்! மருத்துவர்: வணக்கம். மேகலை: நம்பிக்குஆபத்து எதுவுமில்லையே? மருத்துவர்: மூளையில்சேதம் ஏதுமில்லை. நினைவு திரும்ப இன்னும்சிலமணி நேரம் ஆகும். (அப்போது பணியாள் ஒருவன் வந்து துணைவேந்தர் அழைப்பதாகச் சொல்லி மேகலையை அழைத்துச் செல்லுகிறான், வீணா நம்பியைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் அவன் படுக்கைக்கருகில் நாற்காலியில் அமர்கிறாள்) காட்சி 16 இடம் * துணைவேந்தர் அறை நேரம் : Lü f☽ ❍ ☾ உறுப்பினர்: துணைவேந்தர், மேகலை, ஆங்கிலப்பேராசிரியர் சீனிவாசன். துணைவேந்தர் கவலை தோய்ந்த முகத்தோடு வீற்றிருக்கிறார்: எதிரில் ஆங்கிலப் பேராசிரியர் சீனிவாசன் அமர்ந்திருக்கிறார். மேசை மீதிருந்த கோப்புகள் மின்விசிறிக் காற்றில் படபடக்கின்றன. முருகுசுந்தரம் கவிதைகள் 175