பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 17 இடம் : மேகலையின் வீடு, நேரம் : இரவு உறுப்பினர்: மேகலை, சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை இன்னும் மாணவர்கள். மேகலை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எதிரில் உள்ள இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவ்விடத்தில் ஒரு கட்டாய அமைதி எல்லாரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்த அமைதியை உடைத்து மேகலை பேசத்தொடங்குகிறார். மேகலை: உங்கள் போராட்டக் கோரிக்கைகள் யாவை? சொற்கோ: தரமான விடுதியுணவு தட்டுப்பாடில்லாத தண்ணிர் அகமதிப்பீட்டு நீக்கம் மாணவர்க்கு மரியாதை. மேகலை: இவைதான். உண்மையான காரணங்களாக இருந்தால் நானும் நாளை உங்களோடு போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். (மாணவர்கள் எல்லாரும் வியப்போடு நிமிர்ந்து பார்க்கின்றனர்.) உள்ளத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்! இவை தான் போராட்டத்துக்கு உண்மையான காரணங்களா? கவிஞர் முருகுசுந்தரம் 180