பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளுடைய விருப்பு வெறுப்புகளைப் பொருட் படுத்தாமல் அவர்கள் உடல் சங்கமிப்பதுண்டு. காமவேள்வியில் கெளதமன் சொரியும் அவிர்ப்பாகத்தை அவளும் - அமைதியாக ஏற்றுக் கொள்வாள். 4. யுத்த காண்டம் ஆசிரமப் பணியில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட அகலிகையின் உள்ளம் பகலில் - சலனமற்ற தெளிந்த நீரோடை. ஆனால் இருள் கவிந்தபிறகு அவள் அடிமனத்தில் நிஜம் விழித்துக் கொண்டு ஆழத்தில் அமுக்கப்பட்ட சுரைக் குடுவையாக மேலே எம்பிக் குதிக்கும். சில சமயம் பாலாகக் கொதித்துப் பொங்கி வழியும். காற்று மண்டலத்தைக் கடந்தவர் முருகுசுந்தரம் கவிதைகள் 27