26
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
என்று தொடங்கும் பாடல் முதலிய சில நல்ல பாடல்களை மேடைகளிற் பாடுவதற்காக எழுதி வெளியிட்டும் வந்தாரே தவிர, முற்போக்கு இலக்கியம் பற்றியோ, அதற்கான இயக்கத்தின் தேவை பற்றியோ எதுவும் எழுதவில்லை. (ஜீவாவின் இந்தப் பாடல்கள் கோவை ராமதாஸ் போன்ற காத்திரமான குரல்வளம் படைத்த தோழர்களால் மேடைகளில் பாடப்பெற்றுத் தொழிலாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). மேலும் பாரதி மகாகவியா இல்லையா என்ற சர்ச்சை நடைபெற்று நின்றுபோன தருணத்தில், அதனை நாம் இன்றும் போற்றுவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, ஜீவா கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. சொல்லப்போனால், அன்றைய தலைவர்கள் அனைவருக்கும் தொழிற்சங்கங்களையும் விவசாய சங்கங்களையும் கட்டியமைப்பதிலேயே முனைப்பும் ஈடுபாடும் இருந்தன; ஏனைய துறைகளைப் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை; அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. மேலும், உற்பத்திச் சாதனங்களின் உடைமை சம்பந்தப்பட்ட பொருளுற்பத்தி உறவுகளே சமூகத்தின் அடிப்படை (basis) ஆகும். கலை, கலாசாரம், மொழி வளர்ச்சி, இலக்கியம் முதலியன எல்லாமும் சமூகத்தின் மேற்கட்டு மனமே (Superstructure) என்று படித்த பாடத்தின் விளைவாக நேர்ந்த வறட்டுக் கோட்பாட்டு நிலையும் இந்தப் புறக்கணிப்புக்குக் காரணமாகும் எனலாம்.
இதனாலேயே சுயமரியாதை இயக்கத்திலும் பொதுவுடமை லட்சியத்திலும் ஈடுபாடு கொண்டவராக விளங்கி,
- புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
- போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
- பொதுவுடைமைக் கொள்கை
- திசையெட்டும் சேர்ப்போம்:
- புனிதமோடதை எங்கள் உயிரெனக் காப்போம்