28
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
சுதந்திரம் பெற்றதற்குப் பிறகுதான் என்றே கூற வேண்டும். சுதந்திரம் கிட்டிய சூட்டோடு 1947 அக்டோபர் 13 அன்று எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத் திறப்புவிழா நடந்தது. அந்த விழாவையொட்டி ஜனசக்தி பிரசுராலயம் முதன்முதலாக ஓர் இலக்கிய வெளியீட்டை வெளிக் கொணர்ந்தது; அதனைப் பத்தாயிரம் பிரதிகளாக அச்சிட்டது. சுமார் 30 பக்கங்கள் கொண்டதும், ஜீவா எழுதியதுமான ‘பாரதி வழி’ என்ற இந்தச் சிறுநூலே, அவர் பாரதியைப் பற்றி முதன்முறையாக எழுதிய ஒரு முழுமையான மதிப்பீடாக விளங்கியது. பாரதியை வெறும் வேதாந்தக் கவி என்று ராஜாஜி முதலியோர் சொல்லத் தொடங்கியிருந்த அந்தக் காலத்தில், அந்தக் கருத்தை ஆணித்தரமாக மறுத்து பாரதியைப் பற்றிய ஒரு சரியான தரிசனத்தை வழங்கிய நூலாக அது இருந்தது. இந்த நூல் வெளிவந்த காலத்தில், பாரதி மண்டபத் திறப்பு விழாவிற்கு முந்திய நாள் இரவில், ஜீவா கோவில்பட்டியில் ஆற்றிய சொற்பொழிவும், இதன்பின் பாரதி மண்டபத் திறப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவும் அவர் நூலில் கூறியிருந்த விஷயங்களை மேலும் விரித்துக் கூறுவதாகவே இருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஜீவாவோடு எனக்கு முதன்முதலாக நேரடித் தொடர்பு ஏற்பட்டது.
முற்போக்கு எழுத்தாளர் சங்க முயற்சிகள்:
இங்கு நான் என்னைப்பற்றிச் சிறிது கூற வேண்டும், ஏற்கெனவே குறிப்பிட்டபடி நான் 1941 முதற்கொண்டுதான் பத்திரிகைகளில் கதைகள் முதலியனவற்றை எழுதி வந்தேன். என்றாலும் 1939 - 40 ஆம் ஆண்டுகளில் 16 - 17 வயதுப் பருவத்தினனாகவிருந்த நான் நேருவின் சுயசரிதம் (இது வ.ரா.வின் மொழிபெயர்ப்பு ‘சுதந்திரச் சங்கு’ வெளியீடு என்று நினைக்கிறேன்), பா.ரா. எழுதிய ‘எல்லோரும் ஓர் குலம்!’ மற்றும் பிரபலமான நெல்லை தேச பக்தரும், அந்நாளில் காங்கிரஸ் சோஷலிஸ்டுமாகவிருந்த எஸ்.என். சோமயாஜுலு எனக்கு ரகசியமாகக் கொடுத்த