இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நன்று புவிவாழ்வு—மிக
நன்று மிகநன்று!
மென்று விழுங்கும் “புலிப்—பெருவாய்”
மேதினிஎன்று பொருள்.
தம்பிஉனக் குரைப்பேன்—நீ
சஞ்சலம் கொள்ளுகின்றாய்!
வெம்புகின்றாய் உளந்தான்—இந்த
வேதனைச் செய்தியினால்!
அம்பு தொடுக்காமல்—நா
லாட்படை ஏவாமல்,
கும்பலிற் சாகும்வகை—இயற்கை
கோடிவகை புரியும்!
பூகம்ப லோகத்திலே—தீயும்
புனலும் வாழ்புவியில்,
வேகும் எரிமலைகள்—நல்ல
வேட்டையிடும் புவியில்.
நோகும்படி தோன்றிக்—கொல்லும்
நோய்கள் ஒருகோடி
ஆகுமிப் பூமியிலே—நீ
அன்புறு வாழ்க்கையுற
மன மிருந்தாலோ—ஒரு
மருந்துனக் களிப்பேன்.
தினமிரு வேளை—அதைத்
தின்றுவர வேண்டும்.
எனை வெறுக்காதே—மருந்
தின்னதெனச் சொல்வேன்.
15