பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தினையள வேனும்—அதைச்
      சீயென் றொதுக்காதே!
சாவது நிச்சயமாம்—நான்
      சாவது நிச்சயமாம்
சாவது நிச்சயமாம்—என்ற
      சத்திய வார்த்தையினைக்
கூவுதம்பி கூவு!—இந்தக்
      குவலயம் கேட்கக்
கூவுக லக்ஷமுறை!—உன்
      கொச்சை மனந்தெளியும்!

அந்தத் தெளிவினிலே—உனக்
      காண்மை உதித்துவிடும்!
சொந்த உலகினிலே—என்றும்
      தொல்லை விளைத்துவரும்
எந்த மனிதனையும்—நீ
      ஏறிக் கலக்கிடுவாய்!
சந்ததம் இன்பத்திலே—புவி
      சாரும் வகைபுரிவாய்!

மக்களுக் கிங்குழைப்பாய்—இங்கு
      வாழ்ந்திடும் நாட்களெலாம்,
தக்கன செய்வதற்கே—மனம்
      சலித்தல் விட்டொழிப்பாய்!
அக்கினி மத்தியிலும்—நீ
      அஞ்சுதல் நீக்கிடுவாய்!
புக்க மனிதரெலாம்—ஒற்றைப்
      போகமுறை உழைப்பாய்!

 

16