பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலக முன்னேற்றம்

உலகமே உயர்வடைவாய்!
உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்!
    நலந் தரும் சமத்வம்
    நாடுதல் மகத்வம்
நண்ணுவாய் சுதந்தரத்வம்! (உலக)

கலகமேன்? சண்டைகளேன்?
கருத்தெலாம் பேதம் கொள்வதேன்?
    கலன் செல்லும் பாதையின்
    காரிருள் வெளிக்குக்
கல்வியே சுடர் விளக்கு! (உலக)


கொடை வாழ்க!

எக்காளக் குயில்

வெண்பா

நின்றசெங் காந்தட்பூ நேரிற்கை யேந்தநெடுங்
கொன்றைமலர்ப் பொன்னைக் கொட்டுகின்றாள்-என்றே
அடைகுயில்கள் எக்காளம் ஆர்த்தனவே மண்ணிற்
கொடை வாழ்க என்று குறித்து.

 

29