பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


காதற் பகுதி

கண்டதும் காதல்!

(வண்ணம்)

ஸ்ரீமதிஇவ ளார்? உலகிடை மானிடமதி லேதிவள்? ஒரு
சேலிணையினை நேரிருவிழி, கோகனகவி நோதஅதரம்,
மாமதிநிகர் ஓரிளமுகம், வானுறுமழை தானிருள் குழல்,
வாழ்மதுகரம் ஊதிடுமலர் சூடியமுடி யோடிவளிரு
மத்தக மொத்த தனத்தொடு சித்தமி
னித்திட நிற்பது மிக்கவும் அற்புதம்!
மலர்வாய் திறந்தொரு வார்த்தை சொல்லாளோ?

தோய்மதுமலர் மாலையைநிகர் ஆகிய ஒருதேகவனிதை
தீவிரநடம் ஆடியமயி லேஎனுமொரு சாயலினோடு
மாசறுகலை மானெனமருள் வாளவள்நடை யோ அனநடை
வாழுலகினி லேஇவளரு ளாலதிசுக மேபெருகிடும்!
வைத்திடு புத்தமு தத்தையெ டுக்கம
றுத்திடல் மெத்தவ ருத்தமெ னக்குறும்!
மதுவோடையை மொண்டுண வாக்கு நல்காளோ?

 

30