பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வறுமையிற் செம்மை (தாய்-மகள் சம்பாஷணை)

சகானா ஆதி

மகள் சொல்லுகிறாள்:
அம்மா என் காதுக்கொரு தோடு-நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடி யாது-நான்
சொல்லி விட்டேன் உனக்கிப்  போது! (அம்)

தாய் சொல்லுகிறாள்:
காதுக்குக் கம்மல் அழ கன்று-நான்
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகு பணிவாய் நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்! (கா)

மகள் மேலும் சொல்லுகிறாள்:
கைக் கிரண்டு வளையல் வீதம்-நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும்!
பக்கியென் றென்னை யெல் லோரும்-என்
பாடசாலையிற் சொல்ல நேரும்! (கைக்)
}
 

44