பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாய் சொல்லும் சமாதானம்:
வாரா விருந்து வந்த களையில்—அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு—பெண்ணே
அவர் சொல்வ துன்கைகட்கு விலங்கு! (வாரா)

பின்னும் மகள்:
ஆபர ணங்கள் இல்லை யானால்—என்னை
ஆர் மதிப்பார் தெருவில் போனால்?
கோபமோ அம்மா இதைச் சொன்னால்—என்
குறை தவிர்க்க முடியும் உன்னால் (ஆப)

அதற்குத் தாய்:
கற்பது பெண்க ளுக்கா பரணம்—கொம்புக்
கல்வைத்த, நகை தீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு—தன்
கண்ணில் ஒற்றிக்கொள்ளுமன் போடு! (கற்)
 

45