இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாய் சொல்லும் சமாதானம்: | ||
வாரா விருந்து வந்த | களையில்—அவர் | |
மகிழ உபசரித்தல் | வளையல்! | |
ஆராவமுதே மதி | துலங்கு—பெண்ணே | |
அவர் சொல்வ துன்கைகட்கு | விலங்கு! | (வாரா) |
| ||
பின்னும் மகள்: | ||
ஆபர ணங்கள் இல்லை | யானால்—என்னை | |
ஆர் மதிப்பார் தெருவில் | போனால்? | |
கோபமோ அம்மா இதைச் | சொன்னால்—என் | |
குறை தவிர்க்க முடியும் | உன்னால் | (ஆப) |
| ||
அதற்குத் தாய்: | ||
கற்பது பெண்க ளுக்கா | பரணம்—கொம்புக் | |
கல்வைத்த, நகை தீராத | ரணம்! | |
கற்ற பெண்களை இந்த | நாடு—தன் | |
கண்ணில் ஒற்றிக்கொள்ளுமன் | போடு! | (கற்) |
45