பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




அந்திப்போதின் கதி!

அந்தியும் மேற்கில் மறைந்தாள்—அவள்
ஆடையெனும் கருவானம்,
எந்தத் திசையிலும் காற்றில்—பறந்
தேறிடும் காட்சியும் கண்டீர்!
சிந்திய முத்து வடந்தான்—ஒளி
சேர்ந்திடு நட்சத்திரங்கள்!

சிந்தையிற் கோபம் அடைந்தாள்—அந்தி
சின்றமுகம் இங்குத் திருப்பாள்.
பாடுங் கடற்பெரு வேந்தன்—தன்
பங்கில் இருந்தன னேனும்,
நாடும் உளத்தினில் வேறு—தனி
நங்கையை எண்ணிடலானான்.
ஏடு திருப்பிப் படித்தால்—அந்தி
எப்படி ஒப்புவள் கண்டீர்!

ஆடி நடந்து வந்திட்டான்—அதோ
அந்தியின் நேர் சக்களத்தி!
கன்னங்கறுத்த நற் கூந்தல்—அந்தி
கட்டவிழ நடந்தாளே!
சென்னி புனைந்த கிரீடம்—மணி
சிந்திட ஓடி விட்டாளே!

 

7