பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யுளகன்னிம் வெறுத்தாளே—கடற்
காதலன் போக்கினை எண்ணி!
என்ன உரைப்பினும் கேளாள்-அந்தி
யின்முகம் கீழ்த்திசை காட்டாள்!
ஏடி ஒளிமுகத்தாளே!-- அந்தி!
என்னை மறந்தனை என்றே

கோடிமுறை அழைத்திட்டான்-உளம்
கொந்தளிப் புற்றுப் புரண்டான்!
வாடிய அந்தி நடந்த—அந்த
மார்க்கத்திலே விழி போக்கிப்,
பீடழிந்தான் அந்த நேரம்—ஒரு
பெண்வந்து பின்புறம் நின்றாள்!
வந்திடும் சோதி நிலாவைக்—கடல்
வாரி அணைத்தனன் கண்டீர்!

அந்தி பிரிந்ததினாலே—கடல்
ஆகம் இருண்டது; பின்னை
விந்தை நிலாவரப் பெற்றான்—கடல்
மேனியெலாம் ஒளிபெற்றான்!
சிந்தையை அள்ளுது கண்டீர்!—அங்குச்
சீதக் கடல் மதிச் சேர்க்கை!