உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு உஎ தூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், புறப்பொ ருள்' என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமையாதன வான பல்வகை முயற்சிகளை யும் முற்றுப்பெறுவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம். இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்துவைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவைதாம் எழு தப்படுதல் இல்லை. எல்லாமக்கட்கும் பொதுவாய் வரு கின்ற அன்பினால்நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந் திணை யொழுக்கம் எனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங்குறித்து ஒருவர்பெயர்சொல்லாம லே வரையப்படும் என்பதுதெளிந்துகொள்க. இதுகடைப் பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர்தொல்காப்பியனார், "மக்கள் நுதலிய அகன் ஐந்திணையுஞ் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பொ என்று கிளந்து கூறினார். இனி, இதுபோற் பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற் பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செய் லும் உடையராய் உலதநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் மயின்று வரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு தொல்காப்பியம்,பொருள், ருச.