உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலக நடையிற் பெரும்பான்யையும் வேறுபட்டு வெளியே தோன்றிக்கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன் றும் பண்புசெயல்களைக்கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப்பண்பு செயல்கட்கு உரியார்பெயர் கூறல்வேண் டுவது இன்றியமையாததேயாம் என்க. இந் நெறி அறி வுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார், "புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத லிலவே' . என்று கூறினார். இனி, அகம் புறம் என்னும் இவ்விருவகை ஒழுக் கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச் செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகி வருமா யின், அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப் படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின் னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகிவருமாயின் அவற் றள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலா யின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புற வொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்பவருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல் களிலெல்லாம் இனிது காணப்படும். தொல்காப்பியம்,பொருள், ருரு.