பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. காட்டி எழுந்தது போல இருட்கூட்டம் குவிந்து மழுங்கி அலைகடலிற் சென்று அடங்கும்படி இளை யஞாயிறு உருக் கித் திரட்டிய பசும்பொற் சோளம் போலத் தள தளவெனக் கீழ்த்திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் டொன் உரைத்த கற்போற் பொலிந்து பிரகாசிப்பவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு, வெண்மை முதலான நிறவேறுபா டுள்ள உலோகங்கள் உருகி ஓடுகின்ற நிலம்போல வான் இட மெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமேகங்க ளெல்லாம் செவ்வாக்கு வழித்த அகன்ற திரைச்சீலைகள் எனவும் வெளிய மேகங்களெல்லாம் பொற்பட் டுப் படாம் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற்கரிய பெரும் பிரகாசத் துடன் திகழவும் உலகமங்கை நகைத்தாற்போலப் புதுமை யுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென் றே அறிதல் வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடி யற்கால அழகினைக் கண்டு வியந்த வண்ணமாய் மீன் வலை யோடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார் ? அவ்விடியற்காலையிலே முல்லை நிலத்துக் கோவலர் ஆன் கன்றுகளைக் கொட்டிலிலே தாம்பினாற் கட்டிவைத்து, ஆன் நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல்மேயவிட்டுத் தாம் மரநிழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப்போர்வை மேற்கொண்டு கரிய மேகங் கள் நெற்றி தழுவிக்கிடப்பப் பெருந்தன்மையோடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்து அவர் கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும்போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும். காதலினாற் கட்டுண்ட இளை ஞரும் மகளிரும் நெகிழாத அன்பின் மிகுதியால் தோ ளோடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தோறும், தூங்க ணங்குருவிகள் மரங்களில் விசித்திரமான கூடுகட்டுதலையும், மரப்பொந்துகளில் மணிப்புறாக்கள் கூவுதலையும், ஆண்மயில்