பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. செய்து வந்தனர்; அப்போது தான் அவ்வேள்விச் சடங்குகள் செய்யவேண்டும் முறையினை மிக வி ரித்தெழுதிப் பிராமணர் கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங் களைக்கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக்குருக்கள் மார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான் மிக்க சான்றோர்கள் இங்க னம் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகளைச் செய்தலாற் போதரும் பயன் என்னை !' என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற்சிலரைத் தம் வயப்படுத்திக்கொண்டார். இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரியநன்மக்கள் சிலர் தாமும் தழுவி ஒழுகப்பு குந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ் உபநிடதங்கள் ஆரியர்க்கு மேற்பட்ட அறங்களை அறிவுறுத் தி அவர் செய்து ! போந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான் றுகள் பலவிருக்கின்றன. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப் பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிடுவித்துச் செய் யும் வேள்விகள் சிறிதுங் குறைவு படாமல் ஆரியர்க்குள் மிகுந் து வந்தமையானும், ஆரியக்குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தின மையானும் ஆரியர்க்கும் தமிழர்க்கும் இதன் பொருட்டு வழக் குகளும் எதிர்வழக்குகளும் நேர, அச்சமயத்தில் வடநாட்டிலி ருந்த தமிழ அரசர் குலத்திற் கெளத.0 சாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ் மக்கள் ஆராய்ந்துவந்த அரிய நல் லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப்புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக இரக்கத் துடன் நல்லொழுக்கங்களின் விருப்பத்தை எடுத்து விரித் து, இந்நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமல் தழுவி நடப்ப னாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடு