பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. கின்ற நிருவாணம் என்னுந் தூயநிலை தானேவருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலு மேலும் பாவமேவிளையுமல்லது புண்ணியம் எய்தாதென்றும் கௌ தமர் அருள் கனிந்து அறி வுறுப்பாராயினார். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கெளதமர் கொள்கைகள் சில நாளிலே எங் கும் பரவின. மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள் மார் சொற் களில் ஐயுறவுகொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆரா யப்புகுந்தார்கள். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந் தனர். பிராஞ்சு தேசத்திற் * றோன்றியதைப்போல எங்கும் ஒரு பெரிய மாறுதல் உண்டாவதாயிற்று. இங்ஙனம் ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்றுவரும் போது தென்னாட்டிலுள்ள தமிழரும் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்துவைத்த அரிய பெரிய நுண்பொருள்களை வெளி யிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டை நா ளிற் போலப் பெரிதும் வளம்படுத்துவதற்குத் துவங்கினார். இங் ஙனங் கிறித்து பிறப்பதற்கு முன் ஒருகானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய பௌத்த சமய விளக் கமே அக்காலத்திற் றமிழ்மொழியின் கண் அரும் பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுவதற்கு ஒரு பெருங்காரண மாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திரு வள்ளுவநாயனார் இயற்றிய அரிய பெரிய திருக்குறள் என் னும் நூலிற் கொல்லாமை புலாலு ண் ணாமை ஒழுக்கமுடை மை என்னும் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப்பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க. இனி இப்பொருள்களெல்லாம் பௌத்தசமய நூல்களில் லிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாரும், திருவள்ளுவ நாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமி ழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுட்பத்தையே கௌதமர் என் னுந் தமிழப்பெரியார் விள க வந்தமையால், அவ்வொழுக்க

  • The Irench Revolution.