பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான் றோர் தமக்கும் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பொருள்களைப் பௌத்தசமயம் யாண்டும் விரிந்து பரந் தகாலத்தில் தடையின்றிச் சொல்லுவதற்கு இடம் பெற்றா ராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கெளதம் சாக்கியருக்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக . "அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன் றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்யும் வேள் விப்பயனை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத் திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங் காங்கு ஆரியமக்கள் செய்யும் மற்றைக் கருமச் சடங்குகளை யும் மறுத்துக்கூறுதல் கண்டுகொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும். இனி இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங் களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரிய தோர் இயைபு உண்டென்பதனை விளக்கு தற்பொருட்டே இவ் வோர் ஐந்நூறாண்டின் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினார். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன் றியமையாது அறியற்பாலதாம். இதுபற்றியே ஆங்கிலமொ ழியில் இதுபோன்ற நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவில் லியம் மிண்டோ என்னும் உரைகாரர், காலப்போக்கு என் பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களி னும், சிற்பவேலைகளிலும், உடைகளினும், அவர்கள் நடாத் தும் வாணிகவாழ்க்கையினும், அவர்கள் நியமிக்கும் தொழிற் சாலைகளிலும் எல்லாம் தன் அடையாளத்தைப் பதிய முத்தி ரிக்கின்றது. ஒரு புலவனும் இக்கால இயற்கையின் வழிநின்