பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. தூஉம் ஒருங்கே ஆராய்வதாம். இனிப் புறப்பொருள் என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றி யமையாது வேண்டப்படும் பலவகைக் கருமங்களையும் முற்று வித்தற் பொருட்டுச் செய்யும் முயற்சி வேறுபாடுகளும் பிறவும் தெள்ளிதின் ஆராய்வ சாம். இனிப்பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கை யினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண் மகளையும் எடுத்துவைத்து, அன்னவர் தமக்குரிய பெயர் சொல்லி அவைதாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந் திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக்கூறு தல், அவ்வன்பின் ஐந்திணை யொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம்போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாம் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார், மக்கள் நுதலிய அகன் ஐந்திணையுஞ் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறா அர். என்று கிளந்து கூறினார். இனி அதுபோற் பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ் வொருவரும் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல வகைப்பட்ட உணர்வும் பலவகைப்பட்ட செயலும் உடைய ராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர் தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரியபெயர் குணம் செயல் முதலியன எல் லாம் கிளந்தெடுத்துக்கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் குணஞ்செயல் ஏனையொருவர் குணஞ்செயல் போ லன்றி உலக நடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெ ரியே தோன்றிக்கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத்