பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டினியல்பு. யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப்பாட் டை உய்த்துணர்ந்து மகிழ்ந்து கொள்க. இன்னும் இவ்வகப்பொருள் முல்லையொழுக்கத்தினை இவ்வாறு நடாத்திக்கொண்டு சென்று, அக.வது வரியில் இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள் என்பது டன் முடிக்குமிடத்தும் வினைவயிற் பிரிந்த தலை மகன் மீண்டு வந்தமை சொல்ல வேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு, 'இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவி நிறைய ஆரவாரித்தன' என்று மேல் ஒட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான (ஆரவாரித்தன' என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழியான 'கிடந்தோள்' என்பதுடன் சேர்த்தி, அ சன் எழுவாயான 'வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே' என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ் விரண்டற்கும் இடையில் அவன் மீண்டுவந்தமை விளங்கக்கூறி அமைத் தார். முடிக்கின்ற இடத்திற் 'கிடந்தோள் செவி நிறைய ஆலின' என்று உரைப்பின், எவை ஆலின ? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவா யைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்க னம் பிறழக்கூறுதல் பொருள் வலிவு தோன்று தற்பொருட் டும், கற்போர்க்கு மேலு மேலும் விழைவுள்ளம் தோற்று வித் தற்பொருட்டுமாம் என்பது ஆங்கில மொழியிற் .ெயின் என் பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நூலினுங் கண்டு கொள்க. இந்ந ணுக்கயெல்லாம் அறிந்து செய்யுளியற்றிய நப்பூதனார் பேரறிவும் போராற்றலும் பெரிதும் வியக்கற் பாலனவாம் என்க.