பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. இனி இஃது எங்ஙனம் முடியும் ! எங்ஙனம் முடியும்!' என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங்கற்றுத் துறைபோகும் வண்ணம் அப்பொ ருள் இடையறுந்து நிற்கும் இடமே பிறபொருளை இணைப்ப தற்கு இசைவான சந்து வெளியாம் என்க. அதுபோல இப் பாட்டில் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்குஞ் சந்து வெளி யாதோவெனிற்கூறுதும்; தலைமகன் கூறிய கார்ப்பரு வம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக் கு நற்சொற் கேட்டு வந்த பெருமுது பெண்டிர், நாங்களும் படைத்தலைவருங்கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத்துப்போன கருமத்தை விரைவில் முடித்துத் திரும்பி உன் னுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ ஆற்றிக் கொண்டு இருத்தல் வேண்டும். என்று பல காலுஞ்சொல்லி வற்புறுக்கவும் வற்புறுக்கவும், அவள் அவர் சொற்களைக் கே ளாமல் பூப்போன்ற மை தீட்டிய கண்ணினின்றும் நீர் முத் துப்போல் துளித்துளியாய்விழக் கலுழ்ந்து வருந்தினாள் என உந.-வது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவு பெறாமல் இடையறுந்து நிற்பது காண்க , இப்பாட்டினைக்கற்போர் இவ் வள வில் தாங்கற்பதை நிறுத்தி விடாமல், இங்ஙனம் வருந்திய அப்பெண்மணி பின் எவ்வாறு ஆயினாள் எனப் பின்னும் அறி வதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறியும் விழை வால் மேலுங்கற்பதற்கு மன வெழுச்சி மிகுந்து நிற்கும் பொ ழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படுமாயி னும் அதனால் தாம் சிறிதும் சலிப்படையா மல், அவ்விடைப் பட்ட பொருளையுங்கற்று மேற்சென்று பொருள் முடிவு காண் பரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல் லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப்பொருளை மறித்து அதனோடு இயைபுடைய வஞ் சிப்பொருளை இடையே கொணர்ந்து நுழைவித்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப்பொருளை அ0-வது வரியிலே இன் துயில் வதியுநன் கா ணள் துயர் உழந்து" எ ன் ப து ட ன் கொண்டுபோய் இணங்கக்கொளுத்தி ஆசிரியர் இச்செய்