இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148 என் அன்பே என்று பதைத்தது வீரன் உடல்! என் அன்பே என்று அதிர்ந்தது செல்வியின் மலர் உடல். இருவர் தோன்களும் தழுவின காதற்பதைப்பால் போகும் -உயிர்கள் பிடித்து நிறுத்தப்பட்டன சிறிதுநேரம், - குருதி சிந்திய போர் நிலத்தில்-அந்த மலர் மஞ்சத் தில்-ஒரே நேரத்தில்-ஒரே கணத்தில் இரண்டு காரியங் கள் நிகழ்ந்தன. அவை ஒரே ஒரு காதல் முத்தம், இரண்டு மரணம்!