மடங்கிய விரல் 88
தார். அப்போது அவர் திருக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதைக் கண்டு, அது இயற்கையோ என்று அருகில் உள்ளவரை விசாரித்தார். இயல்பன்று என்பது தெரிந்து, 'இவர்களுக்கு எவையேனும் குறைகள் உண்டோ' என்று கேட்டார். "ஒன்றும் இருந்ததாகத் தெரியவில்லை” என்று சிலர் கூறினர்.
ஆளவந்தாருடன் இருந்து காலட்சேபம் கேட்டு வந்த மாணுக்கர்களிடம், "அவர்கள் திருவாக்கிவிருந்து அவர் களுக்கு கிறைவேற்ற வேண்டிய காரியங்கள் எவையேனும் இருந்ததாகத் தெரிந்தனவா?’ என்று கேட்டார். -
அவர்கள், வியாசர் இயற்றிய பிரம்மசூத்திரத்திற்கு பூ வைஷ்ணவ சித்தாந்தத்துக்கு இசைய ஒரு வியாக்கி யானம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். வியாசர், பராசரர் என்னும் இருவருக்கும் நன்றியறிவைத் தெரிவிக்க ஏதேனும் செய்யவேண்டும் என்றும் கூறிய துண்டு. இம்மாழ்வாரிடத்தில் போன்புடையவராக இருக் தவர்; அவருடைய கினேவாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற ஆவலும் இருந்திருத்தல் கூடும்” என்ருர்கள்.
இதைக் கேட்ட இளே யாழ்வார்; 'பெருமாளுடைய திருவருள் துனே இருந்தால் இந்த மூன்று குறைகளையும் திர்க்க முயல்வேன்' என்று அங்கே உறுதி பூண்டார். பூண்டவுடனே ஆளவந்தார் கையில் மடங்கியிருந்த விரல் கள் கிமிர்ந்துவிட்டன. அது கண்டு யாவரும் வியந்தனர். 'ஆளவந்தார் செய்து வந்த பூ வைஷ்ணவ சமயத் திருத் தொண்டை ஏற்றுக்கொள்ளத் தாங்களே தக்கவர்கள்' என்று அனைவரும் கூறி இளையாழ்வாரைப் பாராட்டினர்.
அன்று கூறிய உறுதி மொழியை ரீ இராமாநுசர் பின்பு நிறைவேற்றினர். பிரம்ம சூத்திரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றியதாலும், கூரத்தாழ்வாருடைய குழந்தை