பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் முடிபு. சிறு விளக்கம் 10 or

ஆற்றாயின், மிக்க செந்தமிழ் நூற் புலமையும் துணிகிய அறிவுமுடைய நச்சினிர்க்கினியர் அவ்வாறு இனங்காவுரை எழுதியதுதான்் என்னையோவெனின் ; வடமொழியில் இங்ஙனமே செய்யுட்களை அலைத்துப் பாட்டு ஒரு பக்கமும் *2-●女 ஒரு பக்கமுமாக இனங்காவுரை எழுதிய சங்கராசிரியர் காலத்திற்குப் பின்னேயிருந்த நச்சினார்க்கினியர், வடமொழியில் அவர் எழுதிய உரைகளைப் பின் முறை பார்த்து அவை போற்றமிழிலும் உரை வகுக்கப் புகுந்து தமிழ்ச் செய்யுள் வழக்கின் வரம்பழித்து விட்டாரென்றுணர்க: வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசிரியர் இயற்றிய பாடிய டிரை அச்சூத்திரத்திற்குச் சிறிதும் ஏலாவுரை என்பது, ஆசிரியர் இராமாநுசர் பாடிய உரையானும் திபா (Thibaபt) பண்டிதர் திருப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பானும் உணர்க.

இனி ஆசிரியர் நச்சின்ார்க்கினியர் உரை பொருந்து மிடங்களிலெல்லாம் ஏற்றுக்கோடற் பாலதேயாம் என்பதும், அரிய பெரிய பழந்தமிழ் நூல்கள் விளங்குமாறு விளக்கவுரை விரித்த நச்சினார்க்கினியர் இவ்வாறு ஒரோ விடங்களில் நலிந்துரை எழுதுதல்பற்றி இகழப் படுவாரல்ல ரென்பதும் ஈண்டு வற்புறுத் து கின்றோம்.