பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 வாங்கிக் களக்காட்டுச் சீமையைப் பரிசாகப் பெறுவதே எங்கள் நோக்கம்,' என்பதைச் சடுதியில் புலப்படுத்திவிட்டனர். கான்சாகியும் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல் களக்காட்டுச் சீமையைத் திருவாங்கூராருக்குத் தாரைவார்த்துத் தந்தான். அதன் பயனாகத் திருவாங்கூராரின் படைப் பலத்தையும், தூத்துக்குடி, அஞ்சங்கோ முத லிய இடங்களில் இருந்துவந்த பீரங்கிகளையும் துணையாகக் கொண்டு 1759 டிசம்பர் 4 ஆம் தேதி பூலித்தேவரின் பலம் பொருந்திய கோட்டைகளில் ஒன்றாகிய வாசுதேவநல்லூரைக் கடுமையாகத் தாக்கினான் கான் சாகிபு. சாவைக் கண்டு சிரிக்கும் சுதரந்திர வீரர்களைக் கொண்ட வாசுதேவநல்லூர்க் கோட்டை தாக்கப் பெற்றது பற்றிக் கான்சாகியின் சிறப்புக்களை ஒன்றுவிடாமல் ஆராய்ந்து சொல்வதையே ஆராய்ச்சி அறிவின் பயனைப் பெற்றதாகக் கருதி 320 பக்கங்களில் நூல் எழுதியுள்ள அறிஞர் ஹில் சொல்வதைப் படிப்போம் :- 'கான்சாகியிடம் பெரும்படை இருந்தாலும் அந்த நகரின் அமைப்பு, அவன் முகாமை வீரமறவர்கள் அடுத்தடுத்துத் தாக்குவதற்கு ஏற்றாற்போல் அமைந்திருந்தது. மேலும் கோட்டைக்குள் இருந்தவர்கள் அரும் பெரும் வீரர்கள். கான்சாகியிடம் இருந்த ஒரு பெரும் பீரங்கியும் அது ஏற்றப்பட்ட மறுநாளே வெடித்து விட்டது. என்றாலும் கோட்டையைத் தாக்கக் கான் சாகிபு முடிவு செய்தான். அவன்