பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யவசேன ராஜருட ஏற்றமுள்ள புத்திரனார் அவரை வரித்து வந்தேன் என்றாளே ஆரணங்கு அப்பொழுது நாரதரும் அதிக கிலேசத்துடனே இவள் மனதைத் தானறிய எண்ணியே நாரதரும் கையைப் பிசைந்து கலங்கி யவர் சொல்லலுற்றார் (6) அறியாயோ பெண்ணே அவருடைய காரியத்தை அதிககுண முள்ளவர்தாம் அந்தக்கரண சுத்தியுண்டு சகலகுண சம்பன்னர் தருமிஷ்டர் தான் அவரும் ஆனாலொரு தோஷம் இருக்கிறது காணாய் நீ அந்தவொரு தோஷத்தை இப்பொழுதே சொல்லுகிறேன் இன்று முதல் ஒரு வருஷம் முன்னூற்றறுபதா நாள் மத்தியான காலம் மரணம் வருமென்று சொன்னார் மரணமவர்க் கென்று மகாத்மாவுஞ் சொன்னவுடன் அசுவபதி கேட்டு அதிகம் மனங்கலங்கி இதென்ன விசாரமென்று ஏக்கம் பிடித்தவரும் சாவித்திரி யம்மா நீசந்தோஷ பார்த்தாவை வேறே வரித்திடுவாய் மெல்லியரே என்றுரைக்க வேறே வரியுமென்க விவேகமுள்ள கன்னிகையும் பதிவிரதை யாவார்கள் பர்த்தா வரித்த பின்பு பல புருஷர் தேடுவரோ பதிவிரதா பங்கமன்றோ அழகற்றானானாலும் அதிமூடனானாலும் குணமற்றானானாலும் குரூபியேயானாலும் அந்தமில்லானானாலும் ஆயுளில்லானானாலும் அவரே எனக்கிசைந்த இஷ்டபர்த்தா என்றுரைத்தாள் மனதுக்கிசைந்த பர்த்தா வரித்து வந்தேன் எந்தனையும் கன்னிகாதானம் கொடுங்களென்றாள் கன்னிகையும் நார்தரப்போ நன்மையுடன் ஏது சொல்வர் (அவள்) தாலி பலத்தால் தருமராஜரையுந் தான் ஜயிப்பள் (அவள்) மனது திடத்தாலே மிருத்யுவையும் ஜயிப்பள் அசுவபதி ராஜாவே (உம்ம) அலங்காரக் கன்னிகையை