பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 (அவள்) அதுவொன்றும் பாராதே அந்தஃகரணம் நடுங்கி நாரதர் சொன்னதொரு நாழிகையை எண்ணிவராள் தவசீலனாகுமந்த சத்தியவானப் பொழுது 12 காட்டினிலுள்ள கனி கிழங்கு தான் பறித்து பழங்கள் பறித்துமவர் தழையினால் கட்டிவைத்து கண்டகக் கோடாலியினால் கட்டை பிளக்க லுற்றார். எமதர்மராஜன் சத்தியவான் ஜீவனைக் கொண்டு போதல். கட்டை பிளக்கும்போது கண்கள் கலங்கியவர் தலையுங் கிருகிருக்கத் தன் வசங்களன்றியுமே தலையு மிகவலிக்கத் தன்னுடம்பும் வேர்த்து விட நித்திரையுஞ்செய் வருகுதிப்போ நேரிழையே என்று வந்து விழுந்தான் மலைபோல சத்தியவான் மடியில் விழுந்தவுடன் மங்கையவள் கலங்கி உள்ளம் பறக்க அம்மன் உடம்பு நடுநடுங்க ஆம்பல் மலர்க்கண்ணாட்கு அடிவயிறு தானெறிய நெஞ்சம் கலங்கியம்மன் நீலவிழி நீர்சொரிய மஹாதேவியைத் துதித்து மரத்தடியில் வீற்றிருந்தாள் அங்கோர் மஹாபுருஷன் அதிரூபந்தன் னுடனே கிரீடமும் குண்டலமும் கேசவனார்போல் நிறமும் கறுத்ததொருமேகம்போல் காளமுகில்போல் வடிவும் பீதாம்பரமும் பெருத்தமுத்து மாலைகளும் சிவந்தபுஷ்ப மாலை பூண்ட சுந்தரனார் பேரொளியும் கண்டுமந்த சாவித்திரி கண வரைக் கீழேவைத்து பிரதக்ஷிணமாகவந்து பணிந்து நமஸ்கரித்தாள் தீர்க்க சுமங்கலியாயிரு வென்றார் அப்பொழுதே இதுவே சகுனமென்று எடுத்து முடிந்தாள் தலைப்பில் எமராஜரை வணங்கி ஏந்திழையும் கேட்கலுற்றாள்