பக்கம்:மூவரை வென்றான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105


ஆணும்” என்று யாரோ நெருங்கிய சிநேகிதர்களிடம் விடை பெற்றுக்கொள்கிற மாதிரிச் சொல்லிக் கொண்டு நடந்தார்.

அவரை ஒன்றும் செய்யத் தோன்றாமல் வாயைப் பிளந்து கொண்டு தலைவெட்டிப் பள்ளத்திற்குள் நின்று கொண்டி ருந்தார்கள் அவர்கள். அவர் மேட்டில் ஏறி மாறனேரி வழியாகச் சிவகாசிக்குப் போகும் பர்தையில், சிங்கம் நடக்கிற மாதிரி நேர் எதிரே பாதையைக் குறி வைத்து அம்புப் பாய்ச்சல் போல நடந்து போய்க்கொண்டிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களாலும் அம்பலக்காரர்கள் மனத்தில் மோதிரக் கடுக்கன் ஐயர்மேல் வைரம் தோன்றி முற்றிவிட்டது. இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனறு அடம் பிடிக்கும் நிலைக்குப் பகைமையை வளர்த்துக் கொண்டு விட்டார் ஐயர்.

‘அடேய் ரத்தத்துக்கு ரத்தம் வாங்கற சாதியிலே மீசை மொளைச்ச ஆம்பிள்ளைகளாப் பொறந்துட்டீங்களேடா? உங்களுக்கு வெட்கம் மானம் இல்லே சேலையைக் கட்டிக் கிட்டுச் சமையல் பொறைக்குள்ள போங்கடா’ என்று வயதான கிழவர்களும் கிழவிகளும் மாறனேரியிலும், தாள் கொண்டான்புரத்திலும் வாலிபர்களைக் குத்திக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். வாலிபர்கள் மனத்தில் சுருக்கென்று தைத்தது இந்த வார்த்தை. ‘என்ன மாயம் பண்ணினாலும் சரி! இன்னும் ஒரு மாசத்திலே ஐயன் காது ரத்தம் தலை வெட்டிப் பள்ளந்திலே ஒழுகனும். இதைச் செய்யாமவிடற். தில்லே என்று உள்ளூர்ப் பெரியவர்களுக்கு முன்னே கையடித்துச் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டார்கள் அம்பலக்காரர்கள். ஐயருக்கும் இந்த விஷயம் தெரிந்து தானிருந்தது. ஆனால், போக்குவரவு விவகாரத்தை நிறுத்தாமல் அதே பாதையில் போய் வந்துகொண்டுதான் இருந்தார் அவர். நேருக்கு நேர் கம்பைக் காட்டிபோ, கத்தியைக் காட்டியோ, அவர் காதுக் கடுக்கனை நெருங்க முடியாது என்பது அம்பலக்காரர்களுக்குப் பழைய அனுபவங்களால் நன்கு தெரிந்திருந்தது.