பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் ; (2) திருநாவுக்கரசர் 97 படங்களிலுள்ள மணிகளை ஏந்தி விளக்கொளி செய்கின்றன. தேவர்களும் தனியே வருவதற்கு அஞ்சும் படியான கொடிய பாலை நிலத்தில் நடந்து செல்லுகின்றார் அப்பர் பெருமான். தசை ஒழியக் கால் தேயத் தாண்டக வேந்தர் இரவு பகல் எல்லாம் நடக்கின்றார்; தாமரைப் பாதத்தின் தசைகள் எல்லாம் தேய்ந்த நிலையிலும் சொற்றுனை வேதியனை, சோதி வானவனை' மறக்கவில்லை; வெள்ளி மால்வரை விரிசடையப்பனை மறக்காத சிந்தனையுடன் செல்கின்றார். கால்கள் தேய்ந்தாலும் கயிலை பெருமானைக் காண வேண்டும் என்னும் பேரார்வத்தால் தமது இரண்டு கைகளையும் ஆதரவாகக் கொண்டு தாவித்தாவி ஊர் கின்றார். மேலும் ஆர்வம் மிகுதலால் பருக்கைக் கற்கள் நிரம்பிய அவ் வழியில் மார்பினால் நகர்ந்து செல்லுகின்றார். வழியில் பரற்கற்களில் கனலின் வெப்பம் தீப் போலச் சுடுகின்றது. கயிலை வேட்கை அப்பர் பெருமானை மார்பினால் உந்தச் செய்கின்றது." மார்புத் தசைகளும் உந்தி உந்திக் கெட்டு விடுகின்றன; அடைதற்கரிய குறிக்கோள் ஊறிப் பதிந்துள்ள உறுதி மிக்க நாவுக் கரசரின் நெஞ்சகத்தில் நேசம் மட்டிலும் குறையவில்லை. ஊன் கெட்டு உடல் கெட்டுப் போயினும் உயிர் செலுத்துகின்ற ஆர்வம் மிகுதியால் அந்த அடவிகளில் புரண்டு புரண்டு செல்லுகின்றார். செம்மை நெறியில் உயர்ந்த நாவேந்தர்." அங்கமும் உடலும், அழிந்து தேய்ந்தாலும் மன உறுதி சொற் கோவிடம வலுத்துள்ளது. சிவனது சேவடி நினைந்த சிந்தனை மட்டிலுமே கயிலை நாதன்பால் செலுத்த முடிகின்றது. வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும் மட்டிலும் இப்போது வாகீசரிடம் காணமுடிகின்றது." 78. பெரி.புரா. திருநாவுக.புரா - 355-58 79. மேலது - 359 80. மேலது - 360