பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 155 தானதன, தானாதன, தானதனா, தானாதனா, தானதான, தானாதான, தான்தானா, தானாதானா இவை பதினாறும் நான்கெழுத்தால் வரும் விருத்த அடிகளாம்! இவ்வாறே ஐந்து முதலிய எழுத்துகளால் வரும் அடிகளையும் இங்ங்னம் சந்தக்குழிப்பில் வைத்துப் பெருக்கிக் காணலாம். கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணார் அல்லோ நாமே (3.40:1) இத்திருப்பாடல் தானா தானா என்னும் நான் கெழுத்தாலாகிய அடிகளால் இயன்றதாகும். கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வெனை மருவா வினையே (3.41:1) இது 'தனனா தானா என்னும் ஐந்தெழுத்தாலாகிய அடிகளால் அமைந்ததாகும். இதன் ஈற்றடி தனனா தனனா என ஆறெழுத் தால் வந்தமை காண்க. அரனை யுள்குவீர் பிரம னுருளெம் Ljssors யேமனம் பரவி யுய்ம்மினே (1.90:1) இது 'தனன தானனா என ஆறெழுத்தால் அமைந்த அடிகளை யுடையதாகும். மணியா முதுகுன்றைப் பணிவாரவர்கண்டீர் பிணியா யினகெட்டுத் தணிவா ருலகிலே (1.92:5)