பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மூவர் தேவாரம் - புதிய பார்வை இது 'தனனா தனதானா எனும் ஏழெழுத்தாலாகிய அடிகளை யுடையதாகும். திருஞானசம்பந்தர் அருளிய இத் திருப்பாடல்கள் 'இருக்கு எனப் போற்றப்பெறும் வேத மந்திரங்களைப் போன்று இறைவனைப் போற்றும் மறை மொழிகளாகிய மந்திரங்களாய் அமைந்தமையால் பொருளமைதி பற்றி இருக்கு என்ற பெயரும், இருசீரடியாகிய குறளடிகளால் இயன்றமையால் யாப்பமைதி பற்றிக் குறள் என்ற பெயரும் பெறத்தக்கனவாதலின் இரு பெயர்களும் ஒருங்கியையப் பெற்றுத் திரு இருக்குக் குறள் என வழங்கப் பெறுவனவாயின. இனி எழுத்தின் மாத்திரையேயன்றி அவற்றின் வன்னம், மென்மை இடைமையாகிய ஓசையமைதியினைக் குறிக்கும் முறையில் தத்த, தந்த, தய்ய என முறையே வல்லொற்று, மெல்லொற்று, இடையொற்றுப் பெற்று இவ்வாறு மூவேறு வாய் பாடுகளாக வழங்கும் வண்ணச் சொற்களும் உள. வண்ணப் பாடல்களில் வழங்கும் தத்த, தந்த, தய்ய என்னும் இவை மூன்றும், சந்தப் பாக்களில் வரும் தான' என்பதும், ஒரே மாத்திரையளவினவாம். ஒரு குரு நின்ற இடத்தில் இரண்டு லகு நிற்றலும் சந்தப் பாடல்கட்குப் பொருந்தும். அஃதாவது தான என்னும் சந்தக் குழிப்பு ஒரோ வழி தனன என வருதலும் சந்தப் பாவுக்கு ஏற்கும் என்பதாம். கீழ்க்காட்டிய சந்த விகற்பங்களுக்கும் வண்ண விகற்பங் களுக்கும் ஏற்ற சந்தக் குழிப்பு வாய்பாடுகள் பல தேவார காலத்திற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளன. 'தென்ன வென்று வரிவண்டிசைசெய் திருவாஞ்சியம் (2.7:1) 'தென்னென வண்டினங்கள் செறியார் பொழில் (1.106:10)