பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18C மூவர் தேவாரம் - புதிய பார்வை யாப்பு - 7 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவி (2.38.1) தான தானன தானன தானன தானா யாப்பு - 8 ஆருந்தில்லை யம்பலம் வல்லம் நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல (2.39:1) தானாதன தானன தானா தானா தன்னாதன தானன தானா தான கீழ்க் கூறிய 6, 7 ஆம் யாப்பு விகற்பங்களை இருமுறை மடித்துச் சொல்ல அமைவது எட்டாம் யாப்பு விகற்பம். இவற்றுள் 1, 6, 7, 8-ஆம் யாப்பு விகற்பங்கள் (1-10, 3539-ஆம் பதிகங்கள்) ஒத்த ஓசை வகையால் ஒரு கட்டளை யாகவும், 2-ஆம் யாப்பு விகற்பம் (11-16ஆம் பதிகங்கள்) ஒரு கட்டளையாகவும் 3, 4-ஆம் யாப்பு விகற்பங்கள் (17-28-ஆம் பதிகங்கள்) ஒரு கட்டளையாகவும், திருவிராகப்பதிகங்கள் (29-34-ஆம் பதிகங்கள்) ஒரு கட்டளையாகவும் கொள்ள, இந்தளப் பதிகங்களின் கட்டளைகள் நான்காதல் காணலாம். சீகாமரம் என்ற பண்ணமைந்தன. 40 முதல் 53 வரையுள்ள பதிகங்களாகும். தாவில் புகழ்க்காமரத்தின் தன்மை தனக் கிரண் டமைத்தார் எனத் திருமுறை கண்ட புராணம் கூறுவதால் இப் பதி கங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டு என்பது பெறப்படும். சீகாமரம் கட்டளை - 1 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார் தம்பிரானாவானும் தழலேந்து கையானும் கம்பமா கரியுரித்த காபாலி கரைக்கண்டன் வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே." 24. சம்பந்தேவா.2.40:1