பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மூவர் தேவாரம் - புதிய பார்வை இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால் (2.991) தந்த தந்த தரனனா தநத தநத தததனா என்றாங்கு வரும் அடிகள் இவண் குறித்த யாப்பின் பட்டனவே யாகும். யாப்பு - 2 அன்ன மென்னடை யரிவையொ டினிதுறை யமார்தம் பெருமானார் (2.102:1) தந்த தந்தன தனதன தனதன தனதன தனதானா தந்த என்பது தான 'தனன எனவும், தந்தன என்பது தானன “தனதன எனவும், தனதன என்பது தானன எனவும் வருதல் அமையும். 102 முதல் 110 வரை அமைந்த பதிகங்கள் ஒரே யாப்பின. யாப்பு - 3 தளரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசி (2.111:1) தனதன தனதன தனதானா தானா தனனா தனதானா இப்பதிகம். தானா - தனனா என்னும் சீர்கள் தம்மொடு மாத்திரை யளவொத்த தனதன - தனதன என வருதலும் இவண் குறித்த ஓசையமைதிக்கேற்பப் பிறவாறு வருதலும் அமையும். யாப்பு - 4 மாதோர் கூறுகந் தேற தேறிய - ஆதி யானுறை யாடானை (2.112:1) தான தானன தான தானன - தான தானன தனாதனா