பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மூவர் தேவாரம் - புதிய பார்வை என வரும். இத்திருமுறையில் முன் வந்த சிவனெனு மோசை' (4:8:1) என்ற பியந்தைக் காந்தாரப் பதிகத்தின் யாப்பினை ஒத்தமைந்தது இத்திருப்பதிகத்தின் யாப்பாகும். 14-ஆம் பதிக மாகிய இது இவனது அநாதி முறைமையான பழைய வரலாறுகள் பத்தினையும் விரித்துரைத்துப் போற்றுவதாதலின் தசபுராணம்’ என்னும் பெயருடையதாயிற்று. யாப்பு - 2 பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தை (4.15:1) தானா தான்ா தனதனனா தானா தனான தனதானா என வரும். இது மூன்றாம் திருமுறையில் 42-ஆம் எண்ணுள்ள நிறைவெண்டிங்கள் (3.42) என்னும் கொல்லிக கெளவாணப் பதிக யாப்பினைப் பெரிதும் ஒத்திருத்தல் காணலாம். 15-ஆம் பதிகம் இறைவனது திருவருட் பெருமையினை யெண்ணி நெஞ்சம் நெக்குருகிப் போற்றி வழிபடும் மெய்யன்பர்களது பண்டைப் பிறப்பின் தீவினையாகிய பாவம் நீங்குதலைக் குறிக் கொண்டு பாடப்பெற்றதாதலின் பாவ நாசத் திருப்பதிகம்' என்னும் பெயருடையதாயிற்று. இதன் இறுதித் திருப்பாடலில் 'எந்தை பெருமான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே. (4.15:11) என இத்திருப்பதிக வழிநின்று இறைவனைப் பரவிப் போற்றுவோர் அடையும் பயன் அறிவுறுத்தப் பெற்றிருத்தல் காணலாம். இந்தளம் 16 முதல் 18 வரையுள்ள பதிகங்கள் மூன்றும் இந்தளம் பண்ணில் அமைந்தன. செய்யர்வெண் ணுலர் கருமான் மறிதுள்ளும் (4.16:1)