பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 3. மூவர் அருளிய திருப்பதிகங்கள் மூவர் முதலிகள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்கள் பற்றிய சில குறிப்புகள் ஈண்டுத் தரப் பெறுகின்றன. 1. திருஞானசம்பந்தர் வருபகற் கற்பம் பலமுயன்றாலும் வரலருந் திறனெலாம் எனக்கே ஒருபகற் பொழுதில் உறஅளித்தனைநின் உறுபெருங் கருணைஎன் உரைப்பேன் பெருமண நல்லூர்த் திருமணம் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே. - இராமலிங்கர் (திருவருட்.ஐந்திருமுறை ஆளுடைய பிள்ளையா அருள்மாலை - 10)