பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 43 முன்னாளில் அருமறைகள் சிவபெருமானை வழிபட்டு திருக்காப் பிடப் பெற்ற திருக்கதவை அருமறைகளை அன்புடன் ஒதும் அடியார்கள் ஒருவரும் திறக்காததால் அவ்வாயில் அடைக்கப் பட்டே இருப்பதையும், அன்பர்கள் வேறோர் பக்க வாயிலை அமைத்து அதன்வழியே வழிபாடு செய்து வருவதையும் அடியார் கள்மூலம் அறிகின்றனர். காழிப் பிள்ளையார் சொல் வேந்தரை நோக்கி, 'அப்பரே, மறைக்காட்டுப் பெருமானை எப்படியும் இவ் வழியாகச் சென்று நாம் வழிபடுதல் சிறப்பு: இத் திருக்கதவு 'திறக்கும்பாடி நீரே செந்தமிழ்ப் பாடியருளுவீர்' என வேண்ட, அவரும் பிள்ளையாரின் திருவுளக் குறிப்பிற்கு இசைந்து "பண்ணினேர் மொழியாள் (அப்பர் 5.10) என்று எடுத்து, கண்ணி னாலுமைக் காணக் கதவினை திண்ணமாகத் திறந்தருள் செய்மினே (1) என்று பாடிப் போற்றுகின்றார். பாடல்களின் பொருட் சுவையினைத் துய்க்க விரும்பிய மறைக்காட்டு இறைவன் பதிகம் முடியும் அளவும் திருக்கதவைத் திருக்காப்பு சீக்கத் தாழ்ந் தருளுகின்றார். இது கண்டு வருத்தமுற்ற அப்பர் பெருமான், அரக்க னைவிர லால்அடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலிர் எம்பெரு மானிரே (11) என்ற இறுதிப் பாடலைப் பாடியதும் கதவின் திருக்காப்பு நீங்கித் திறந்து கொள்ளுகின்றது. இரு பெரியார்களும அளவிலா மகிழ்ச்சியடைந்து அடியார் களுடன் திருக்கோயிலில் புகுந்து இறைவன் திருமுன்னர் வீழ்ந் திறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள் சாத்திப் போற்றுகின்றனர். மறைக்காட்டு மணாளரை வழிபட்டு வெளியே வந்த பின் சொல்லரசர் சண்பை வேந்தரை நோக்கி, 'இத்திருக்கதவம் அடைக்கவுந் திறக்கவும் அமையும்படி பாடியருளுவீர்' என வேண்டுகின்றார். பிள்ளையாரும் 'சதுரம் மறை” (2.37) என்ற முதற் குறிப்புடைய திருபபதிகத்தின்,