பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (2) திருநாவுக்கரசர் 73 என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத்தை (அப்.தே.5.90) அடிகள் அருளினர் என்று பெரியோர் பணிப்பர். ஆனால் இது தனிக்குறுந்தாண்டகமாகத் தொகுப்பில் காணப் பெறுகின்றது. ஏழு நாட்கள் சென்ற பின்னர் பல்லவ மன்னன் சமணர்களை அழைத்து 'நீற்றறையைத் திறந்து பாருங்கள்' என்று பணிக்க, அவர்களும் அதனைத் திறந்து பார்க்கின்றனர். என்ன அதிசயம்! திருநாவுக்கரசர் யாதொரு துன்பமுமின்றி இனிதிருத்தலைக் கண்டு வியப்புறுகின்றனர். அவர் இருந்த நிலையைச் சேக்கிழார் பெருமான், ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கி அம்பலவன் தேனுந்து மலர்ப் பாதத் தமுதுண்டு தெளிவெய்தி ஊனந்தான் இலராகி உவந்திருந்தார்." என்று காட்டுவர் (4) நஞ்சும் அமுதமாதல்: நாவுக்கரசருக்கு யாதொரு இடர்ப்பாடும் நேரிடாததைக் கண்ட சமணர்கள் அரசனிடம் சென்று, 'மன்னா, அவன் முன்னர் நம் சமயத்திலிருந்து பெற்ற மந்திர வலியாலே, வேவாமல் பிழைத்திருக்கின்றான். இனி அவனுக்கு நஞ்சூட்டுவதே தகும்' என்று கூறுகின்றனர். மன்னனும் 'அவ்வாறே செய்யுங்கள்' எனப் பச்சைக் கொடி காட்ட, சமணர்கள் வஞ்சனையால் நஞ்சு கலந்த பாலடிசிலை அமுது செய்யப் பண்ணுகின்றனர். இறைவனது ஐந்தெழுத்து மந்திரத்தை இரவும் பகலும் மறவாது ஒதும் மாண்புடைய நாவரசர் சமணர் களின் வஞ்சனையைத் தெரிந்து கொண்ட நிலையிலும் 'நாதன் அடியார்க்கு நஞ்சும் அமுதாம்' என்று சொல்லிய வண்ணம், நஞ்சு கலந்த பாலடிசிலை அமுது செய்து, யாதொரு தீங்குமின்றி இனிதே இருக்கின்றார். நாவுக்கரசர் இவ்வாறு இருந்த நிலையைச் சேக்கிழார் பெருமானும் வியந்து போற்றுகின்றார். 51. பெரிய புராணம். திருநாவு.புராணம் - 101