இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
3
கீர்த்தனம் கேட்போம்;-உலகப் போர்த்திறம் கேட்போம்; கிண்டி நெஞ்சில் வீரம் பெய்யும் கீதங்கள் கேட்போம்.
4.
காற்றி லேஒளி-மிதந்து காதிற் பாயவே சாற்றும் இன்பப் பேச்சுக் கேட்டுச் சந்தோ ஷங்கொள்வோம்.
5
இருந்த வண்ணமே-உலகில் எட்டுத் திக்கிலும் . பொருந்து செய்தி அத்தனையும் பூரித்துக் கேட்போம்.
98