இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொழில்
1.
"ஞானம் பெற்றவர் செல்வம் படைத்தவர்
நாடும் வாணிகர் மேலவர்; மற்றவர்
ஈனம் உற்றிழி சாதி"என் ருேதிய
ஏச்சுச் சாத்திரப் பேச்சினி இல்லைகாண்;
வான வாழ்வைஇம் மாநில மீதிலே
வருவிப் போம்எனத் தோள்கொட்டி ஆர்ப்பவர்,
ஆன தம்வலி யால்தொழில் பற்பல
ஆக்கு வார்.இனி ஞாலத்தை ஆக்குவார்.
104