பக்கம்:மேகமண்டலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

புக்குப் புறப்பட்டுப் போயினகாண். ஏழையர்கள் ஒக்க உறக்கம் உணர்ந்து முழுகிவிட்டுக் கூழைக் கலக்கிக் குடித்து முயற்சிமிகப் பீழை மடியைப் பிளந்து புறப்பட்டார். எங்கும் விழிப்புக்காண் எங்கும் இயக்கங்காண்! எங்கும் சுறுசுறுப்பின் ஏற்றங்காண் தோற்றங்காண்! செங்கதிரோன் பூவுலகிற் சேர்த்தின்ை சீவசத்தி. மங்கி உறங்கும் மனிதரெல்லாம் ஓடுகின்ருர், கூடுகின்ருர், கூடிக் குலவுகின்ருர், தொண்டுபல நாடுகின்ருர், இன்னேர் நடுவினிலே செல்வமெனும் சேற்றிற் குளித்துச் செருக்கும் மயலுடையார் ஆற்றத் துயில்கின்ருர், அந்தோ அவருக்கே இன்னும் விடியவில்லை. ஏழுமெத்தை யிற்படுத்தே இன்னும் துயின்ருர். எவரும் விழித்திருக்கக் குன்றிக் குலைந்திருளே கூடிக் கிடக்கும்.அவர்க் கென்று விடியும் இனி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/81&oldid=620620" இலிருந்து மீள்விக்கப்பட்டது