பக்கம்:மேனகா 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

மேனகா

புருஷனிடம் பெண்டாட்டியை அனுப்பும் பேடியா நான் என்கிறீர்களே? நீங்கள் ஒவ்வொரு தினமும் ஒரு அன்னிய ஸ்திரீயை அபகரித்து வருவதாகச் சொன்னீர்களே, அவர்களுடைய புருஷர்களெல்லாம் பேடிகளென்று நினைத்தீர்களா? நீங்கள் ஒருவரே உலகத்தில் பேடித்தனம் இல்லாதவர்கள் போலிருக்கிறது? அவர்களுடைய புருஷர் அறியாமல் திருட்டுத்தனமாகக் கொணர்ந்து துணையற்ற இடத்தில் வைத்துக்கொண்டு பெண்களை வற்புறுத்துவது சூரத்தனம் போலிருக்கிறது! அவர்களுடைய புருஷர்கள் தாம் பேடிகளாயிற்றே. அவர்களுக்கு முன்னால் நேரில் போய் இந்தக் காரியத்தை ஏன் செய்யக்கூடாது? இருக்கட்டும்; இந்த விஷயத்தை நியாய ஸ்தலத்திற்கே கொண்டுபோய் எது சூரத்தனம் என்பதை அறிந்து கொள்வோம்! இன்று வந்த மேனகா இந்நேரம் தன்னுடைய வீடுபோய்ச்சேர்ந்திருப்பாள். நாளைய தினமே நியாயாதிபதி இடத்தில் வழக்கு தொடருவதாகச் சொல்லி இருக்கிறாள். இங்கு நடந்த விஷயங்களையெல்லாம், நானும், என் அக்காளும், மற்றும் வேலைக்காரரும் நேரில் பார்த்திருந்தோம். அவளுடைய கற்பை அவளது கணவனுக்கு ருஜுப்படுத்த வேண்டும் அல்லவா! அதற்காக எங்களை யெல்லாம் அவள் சாட்சியாகக் கோரப் போகிறாள். நியாயாதிபதி, குரானை வைத்துக் கொண்டு சத்தியம் செய்யச் சொன்னால், நாங்கள் உயிர் போவதானாலும் பொய் சொல்லமாட்டோம்; நடந்த வற்றையே சொல்வோம். அங்கிருந்து இந்த சூரப்புலி தப்பி வந்தால் இனி மேலும் தினந்தினம் ஒரு அன்னியப் பெண்ணைக் கொண்டுவரலாம்; ஆனால், மேனகாவின் புருஷனுக்கு என்னைக் கொடுத்து விட்டால், பிறகு தினம் தினம் இங்கு வரும் பெண்களின் புருஷர்களுக்குக் கொடுக்க அத்தனை நூர்ஜஹான்களுக்கு எங்கே போவீர்கள்? இதற்காகத்தான் தனியாக இந்த சயன அறையை வைத்துக் கொண்டி ருக்கிறீர்களோ? அடாடா? என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/262&oldid=1251344" இலிருந்து மீள்விக்கப்பட்டது