பக்கம்:மேனகா 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

249

காட்டிக் கொடுக்க மாட்டான். அவன் வீட்டிற்குள் போலீசார் திடீரென்று நுழைந்துவிட முடியுமோ? உள்ளே இருக்கும் கோஷாப் பெண்டுகள் அப்புறம் போக சாவகாசம் கொடுத்த பிறகே போலீசார் உள்ளே நுழைய வேண்டும். அதற்குள் மேனகா பூமிக்குள்ளிருக்கும் அந்தரங்க அறைக்குள் விட்டுப் பூட்டப்படுவாள். அந்த இடத்தை எவனும் கண்டுபிடிக்க முடியாது; அந்தச் சாமர்த்தியம் இல்லாமல் போனால், அவன் துணிந்து இதில் இறங்குவானா?

கோமளம்:- அவனுடைய வீட்டுக்குள் இருக்கும்போது அவளைக் கண்டுபிடிக்க முடியாது. அது சரிதான். அவள் அங்கிருக்கும் வேலைக்காரிக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் வந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீ என்ன செய்வாய்?

பெரு:- அடி முட்டாளே போ; அவள் வெளியில் வந்தால் அதனால் நமக்கென்ன கெடுதல்? மாயாண்டிப்பிள்ளை தான் கடிதம் எழுதியிருக்கிறானே! மாயாண்டிப்பிள்ளை அவளைத் தள்ளிவிட்டான்; அவனிடமிருந்துதான் வந்திருக்கிறாள் என்று நாங்கள் சொல்லிவிடுகிறோம். அதன் பிறகு அவள் ஆயிரம் சொல்லட்டுமே. அவளுடைய சொல்லை யார் நம்புவார்கள்? நம்மீது சொல்ல அவளுக்கு என்ன சாட்சி இருக்கிறது? அவள் எதைத்தான் சொல்லிக் கரடியாய்க் கத்தியபோதிலும் சரி; நாமே அவள் விஷயத்தில் பரிந்து பேசி சிபாரிசு செய்தாலும் சரி; வராகசாமி இனி தன் உயிர்போவதானாலும் அவளை ஒரு நாளும் அழைத்துக்கொள்ள மாட்டான். ஒடிப் போனவளை அழைத்துக்கொண்டான் என்னும் தூஷணைக்கு அவன் ஒருநாளும் இணங்கமாட்டான். அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையில்லை. இந்த அசடு போய் மோட்டார் வண்டியில் விழுந்து அறைபடுமோ; பட்டப்பகலில் கண் அவிந்தா போய்விட்டது! இதுவல்லவோ சகிக்கக் கூடாத கஷ்டமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/267&oldid=1251349" இலிருந்து மீள்விக்கப்பட்டது